தமிழ்நாடு (Tamil Nadu)
ஆம்னி பேருந்து அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து
- தீ பேருந்துகளில் பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
- அலுவலகத்தில் இருந்த கணினி, ஆவணங்கள் உள்ளிட்டவை தீயில் கருகின.
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த பாலவாயல் பகுதியில் உள்ள தனியார் ஆம்னி பேருந்து அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, பேருந்துகள் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், தனியார் ஆம்னி பேருந்து அலுவலகத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கொழுந்து விட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டுவர அம்பத்தூர் உள்பட 3 தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தீ பேருந்துகளில் பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்நிலையில், அலுவலகத்தில் இருந்த கணினி, ஆவணங்கள் உள்ளிட்டவை தீயில் கருகின. மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.