தமிழ்நாடு (Tamil Nadu)
சட்டசபைக்கு கருப்பு மாஸ்க் அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள்
- எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிக்கும் வகையில் திமுக அரசு செயல்படுகிறது என குற்றச்சாட்டு
- கவன ஈர்ப்புகள் இனி நேரலை செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
சென்னை:
தமிழக சட்டப்பேரவையில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு மாஸ்க் அணிந்து கொண்டு பங்கேற்றனர். எதிர்க்கட்சியினர் பேசுவது சட்டசபையில் நேரலை செய்யப்படுவதில்லை, கொரோனா, ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க அரசு அலட்சியம் காட்டுகிறது, எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிக்கும் வகையில் திமுக அரசு செயல்படுகிறது என்பது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து கருப்பு மாஸ்க் அணிந்து சபைக்கு வந்தனர்.
தமிழக சட்டசபையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியபோது நேரலை செய்யப்படவில்லை என்பதால் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதுதொடர்பாக சபையில் விவாதம் நடந்தது. பின்னர் பேசிய சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரலில் இடம்பெறும் கவன ஈர்ப்புகள் இனி நேரலை செய்யப்படும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.