தமிழ்நாடு

தயாரான பங்காரு அடிகளார் சிலை- கண்கலங்கி நின்ற மனைவி லட்சுமி அம்மாள்

Published On 2024-09-11 10:22 GMT   |   Update On 2024-09-11 10:22 GMT

ஆன்மிகப் பணியாற்றி வந்த பங்காரு அடிகளார் உடல்நலக் குறைவு காரரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், மாரடைப்பால் மரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது 82.

இந்நிலையில், மாமல்லபுரம் கல்பாக்கம் சாலையில் உள்ள "ஆர்ட் ஸ்டுடியோ" என்ற சிற்பக்கூடத்தில், மறைந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் மூத்த குருவான பங்காரு அடிகளாரின் கற்சிலை 450 கிலோ எடை கொண்ட கருங்கல்லில், நான்கு அடி உயரம், இரண்டரை அடி அகலத்தில் அவர் அமர்ந்து இருப்பது போன்று தத்ரூபமாக செதுக்கப்பட்டு வந்தது.

இதை சிற்பி முருகன் என்பவர் 4பேருடன் இணைந்து 3 மாதங்களாக செதுக்கி வந்தார். சிலைக்கு இறுதி வடிவமும் கொடுத்து மேல்மருவத்தூர் அனுப்ப தயாராக வைத்திருந்தனர். 

இந்த நிலையில் சிலையை நேரில் பார்க்க பங்காரு அடிகளாரின் மனைவியும் மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவியுமான லட்சுமி அம்மாள் நேரில் வந்தார்.

பட்டறை பணியாளர்கள் சிலையை தண்ணீர் விட்டு கழுவி கான்பித்தபோது, சிலையை பார்த்து லட்சுமி அம்மாள் கண்கலங்கினார்.

பின்னர் சிலைக்கு பூஜைகள் செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சிலை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் வைத்து வழிபாடு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News