தமிழ்நாடு

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் வாசலில் தீ வைத்து எரித்த நபர் கைது

Published On 2024-02-13 02:19 GMT   |   Update On 2024-02-13 02:19 GMT
  • கோவில் முன் அமர்ந்து பெட்ரோல் ஊற்றி பொருட்களை எரித்த வீடியோ வெளியானது.
  • கடந்த ஒரு வாரமாக சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு கைது செய்துள்ளனர்.

சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலும் ஒன்று. கடந்த 6-ந்தேதி இந்த கோவில் வாசல் முன் மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி பொருட்களை தீவைத்து எரிப்பது போன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னையின் முக்கியப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோவில் முன் தீவைத்து எரிப்பதும், கோவில் பாதுகாப்பு பணியில் யாரும் ஈடுபடுத்தப்படவில்லை என்பது குறித்தும் விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் கோவில் கண்காணிப்பாளர் பாலமுருகன் இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகார் அடிப்படையில் போலீசார் சிசிடிவி கேமரா பதிவு உதவியுடன் மர்ம நபரை தேடிவந்தனர். இந்த நிலையில் தீவைத்த நபரை போலீசார் பாரிமுனையில் வைத்து கைது செய்துள்ளனர். அவரது பெயர் தீனதயாளன் என தெரிய வந்துள்ளது. மேலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என போலீசார் தெரிவித்தாக கூறப்படுகிறது.

சம்பவத்தின்போது அவர் கோவிலை சுற்றி வந்ததாகவும், அங்குள்ள செருப்புகளை சேகரித்து தீ வைத்ததாகவும் போலீசாரின் முதற்கட்ட சோதனையில் தெரியவந்துள்ளது. சம்பவத்தின்போது அவர் மதுபோதையில் இருந்தாரா? இவர் யார்? என்பது போன்ற தீவிரவிசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News