தமிழ்நாடு (Tamil Nadu)

சளி-இருமல் பாதிப்பு: கம்யூனிஸ்டு மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு தீவிர சிகிச்சை

Published On 2023-11-14 08:35 GMT   |   Update On 2023-11-14 09:48 GMT
  • ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டிருந்ததால் டாக்டர்கள் செயற்கை சுவாசம் பொருத்தி சங்கரய்யாவுக்கு சீரிய முறையில் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
  • கட்சித்தொண்டர்கள் அவரை நேரில் சென்று பார்க்க முயற்சிக்க வேண்டாம் என்று கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவர் என்.சங்கரய்யா (வயது 102). இவர் சென்னை குரோம்பேட்டையில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக சளி-இருமல், காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்தார். மூச்சு விடுவதற்கும் சிரமப்பட்டார்.

இதனால் அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டிருந்ததால் டாக்டர்கள் செயற்கை சுவாசம் பொருத்தி அவருக்கு சீரிய முறையில் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

அவருக்கு 102 வயது ஆவதால், டாக்டர்கள் தொடர்ந்து அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர். கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் நேற்று நேரில் சென்று பார்த்து சங்கரய்யாவுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றி டாக்டர்களிடம் கேட்டறிந்தனர். இதைத் தொடர்ந்து அவர் உடல்நலம் தேறி, நலம் பெற்று வர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கட்சித்தொண்டர்கள் அவரை நேரில் சென்று பார்க்க முயற்சிக்க வேண்டாம் என்று கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சங்கரய்யாவின் மகன் நரசிம்மன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அவரை உடனிருந்து கவனித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News