தமிழ்நாடு (Tamil Nadu)

திராவிட இயக்கத்தின் 3வது குழல் விசிக- திருமாவளவன்

Published On 2024-09-28 14:13 GMT   |   Update On 2024-09-28 14:47 GMT
  • முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளார்.
  • பொதுக்கூட்டத்தில் கருணாஸ் உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.

தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம், காஞ்சிபுரத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திமுக பவள விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தார்.

அங்கு, காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் அண்ணா சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பிறகு, " மாநில உரிமைகளை பெற அண்ணா, கலைஞர் வழியில் அயராது உழைப்போம்" என அண்ணா நினைவு இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் திமுக பவள விழாவிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளார். இதற்கிடையே, பொதுக்கூட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.

மஜக தலைவர் தமிமுன் அன்சாரி, "தேசியக் கட்சிகளுக்கு நிகராக இந்தியாவின் அரசியலை தன்வயப்படுத்தியுள்ள கட்சி என்றால் அது திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான்" என்றார்.

காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா பொதுக்கூட்டம் - விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. பங்கேற்று உரையாற்றி வருகிறார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியளவில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழி காட்டக் கூடிய அரசியல் கட்சி திமுக. தேர்தல் அரசியலை முன்நிறுத்தி அதிகாரத்தை நோக்கி இயங்கும் சராசரி அரசியல் கட்சி அல்ல. அதனால்தான் 75 ஆண்டுகளாக வீரியத்தோடு வெற்றிநடை போடுகிறது.

திராவிட அரசியலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 3வது குழல். இது தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட அணி அல்ல. இருமொழி கொள்கையில் இன்றும் திமுக திடமாக உள்ளது.

புதிய கல்வி கொள்கையை ஏற்க மறுத்து முதல்வர் உறுதியுடன் உள்ளார்.

சமூக நீதிக்கு இந்தியா முழுவதும் வழிகாட்டும் இயக்கம் திமுக. திமுகவில் அடுத்தடுத்து வருவது கருத்தியல் வாரிசு.

பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வுத் திட்டம்.. இந்தியாவில் யாரும் சிந்திக்காதது.. நான் அடிக்கடி சிலாகித்துப் பேசுகிற திட்டம் சமத்துவபுரம் திட்டம்..

எந்தவொரு கூட்டணியும் தேர்தலுக்குப் பின் சிதறிப் போகும்.. ஆனால், இன்றும் திமுக கூட்டணி சிதறாமல் இருப்பதற்கு காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News