தமிழ்நாடு (Tamil Nadu)
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் நில அதிர்வா?- பொதுமக்கள் பீதி
- நில அதிர்வு பீதியால் அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.
- தமிழகத்தில் எங்கும் நில அதிர்வு கண்டறியப்படவில்லை.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் பரவி உள்ளது.
இதனால் நில அதிர்வு பீதி காரணமாக அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் எங்கும் நில அதிர்வு கண்டறியப்படவில்லை என நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது.