தமிழ்நாடு (Tamil Nadu)

மின்சார ரெயில் சேவை பகுதி நேர ரத்து - தெற்கு ரெயில்வே

Published On 2024-08-11 02:36 GMT   |   Update On 2024-08-11 02:36 GMT
  • மின்சார ரெயில்கள் பகுதி நேர ரத்து செய்யப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
  • மின்சார ரெயில் ரத்து தொடர்பாக தெற்கு ரெயில்வே அறிக்கை வெளியிட்டது.

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் அரக்கோணம் பணிமனையில் 12 ஆம் தேதி (நாளை) மற்றும் 14 ஆம் தேதி காலை 11.10 மணி முதல் மதியம் 1.10 மணி வரையில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் சில மின்சார ரெயில்கள் பகுதி நேரத்திற்கு ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை சென்ட்ரலில் இருந்து 12 ஆம் தேதி (திங்கட்கிழமை) மற்றும் 14 ஆம் தேதி காலை 9. 10, 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில் திருவள்ளூர் - அரக்கோணம் இடையே பகுதி நேரத்திற்கு ரத்து செய்யப்படுகிறது."

"மேலும், அரக்கோணத்தில் இருந்து 12 ஆம் தேதி மற்றும் 14 ஆம் தேதி காலை 11.15 மற்றும் மதியம் 12 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் மின்சார ரெயில் அரக்கோணம் - திருவள்ளூர் இடையே பகுதி நேரத்திற்கு ரத்து செய்யப்படுகிறது."

"இதேபோல, சென்னை சென்ட்ரலில் இருந்து 12 ஆம் தேதி மற்றும் 14 ஆம் தேதி காலை 10 மணிக்கு புறப்பட்டு திருத்தணி செல்லும் மின்சார ரெயில் திருவள்ளூர் - திருத்தணி இடையே பகுதி நேரத்திற்கு ரத்து செய்யப்படுகிறது."

"மறுமார்க்கமாக, திருத்தணியில் இருந்து 12 ஆம் தேதி மற்றும் 14 ஆம் தேதி மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் மின்சார ரெயில் திருத்தணி - திருவள்ளூர் இடையே பகுதி நேரத்திற்கு ரத்து செய்யப்படுகிறது."

"வேலூரில் இருந்து 12 ஆம் தேதி மற்றும் 14-ம் தேதி காலை 10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில் சித்தேரி - அரக்கோணம் இடையே பகுதி நேரத்திற்கு ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து 12 ஆம் தேதி மற்றும் 14 ஆம் தேதி காலை 9.50 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் சிறப்பு மின்சார ரெயில் சென்னை சென்ட்ரல் - திருத்தணி இடையே பகுதி நேரத்திற்கு ரத்து செய்யப்படுகிறது," என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News