தமிழ்நாடு

முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தராஜ்

சசிகலா எங்களுடன் இணைந்து செயல்படுவார்- கிருஷ்ணகிரியில் முன்னாள் எம்.எல்.ஏ. பேட்டி

Published On 2022-09-14 09:39 GMT   |   Update On 2022-09-14 09:39 GMT
  • அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் விரும்புகிறார்.
  • சசிகலாவை அ.தி.மு.க.வில் இணைப்பது தொடர்பாக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி:

அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரியில் நடந்தது.

இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், கிருஷ்ணகிரி முன்னாள் அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான கோவிந்தராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தராஜ் நிருபர்களிடம் கூறுகையில், அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் விரும்புகிறார்.

அவர் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் நாங்கள் அவருடன் இருக்கிறோம். நிச்சயமாக அ.தி.மு.க. ஒன்றுபடும். சசிகலாவை அ.தி.மு.க.வில் இணைப்பது தொடர்பாக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அவர் இணைவார் என தெரிவித்தார்.

Tags:    

Similar News