தமிழ்நாடு (Tamil Nadu)

தொடரும் கனமழை.. ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2024-10-06 02:07 GMT   |   Update On 2024-10-06 02:12 GMT
  • ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
  • தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளில் இருந்து உபரி நீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

நேற்று விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 17 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. மழை தொடர்ந்து வருவதை அடுத்து நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. 

Tags:    

Similar News