தமிழ்நாடு

'யாருக்கும் நான் விருந்து வைக்கவில்லை'- தி.மு.க. எம்.எல்.ஏ. பேட்டி

Published On 2024-08-26 07:17 GMT   |   Update On 2024-08-26 07:17 GMT
  • எனது வளர்ச்சியை பொறுக்க முடியாத சிலர் இவ்வாறான உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பி விட்டுள்ளனர்.
  • எனது மக்கள் பணி, கழக செயல்பாடுகள் இன்னும் வேகமாக இருக்கும்.

சென்னை:

தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பரவிய வதந்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சமயத்தில் அமைச்சர் பதவியை எதிர்பார்த்து விருந்து வைத்த எம்.எல்.ஏ. என்று மற்றொரு தகவலும் பரவியது. ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என்று சேலம் இரா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

அமைச்சர் பதவியை எதிர்பார்த்து விருந்து வைத்த எம்.எல்.ஏ. என்று என்னை குறிப்பிட்டு ஒரு செய்தி வெளி வந்துள்ளதை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். நான் எந்த விருந்தும் வைக்கவில்லை.

எனது வளர்ச்சியை பொறுக்க முடியாத சிலர் இவ்வாறான உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பி விட்டுள்ளனர். அதில் எந்த உண்மையும் இல்லை.

கழக வளர்ச்சி ஒன்றே குறிக்கோள் என்ற வகையில் நான் செயல்பட்டு வருகிறேன். எனது பெயருக்கு யாரும் களங்கம் கற்பிக்க விட மாட்டேன். எனது மக்கள் பணி, கழக செயல் பாடுகள் இன்னும் வேகமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News