தமிழ்நாடு

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி நாளை பதவி ஏற்கிறார்

Published On 2023-05-27 07:19 GMT   |   Update On 2023-05-27 07:19 GMT
  • சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா நாளை பதவி ஏற்கிறார்.
  • கவர்னர் மாளிகையில் நாளை சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலாக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

சென்னை:

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர்நாத் பண்டாரி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார். அதன் பிறகு பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமிக்கப்பட்டார். அவர் கடந்த 24-ந்தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நேற்று முன்தினம் பொறுப்பேற்றார்.

இந்த நிலையில் மும்பை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலாவை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா நாளை பதவி ஏற்கிறார். கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நாளை காலை 10 மணிக்கு அவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

Tags:    

Similar News