தமிழ்நாடு

பொங்கல் பரிசுத் தொகுப்பில் மஞ்சள் வழங்கினால் கொங்கு விவசாயிகள் பயன்பெறுவர்- விவசாயிகள் சங்கத்தினர் பேட்டி

Published On 2022-12-29 10:37 GMT   |   Update On 2022-12-29 10:37 GMT
  • தமிழக அரசு ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகையில் கரும்பை சேர்த்திருப்பதற்கு வரவேற்கிறோம்.
  • பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணை வழங்குதல், சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் வழங்குதல் உள்ளிட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.

நீலாம்பூர்:

தைத்திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக ஆண்டுதோறும் ரேஷன் கடைகளில் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் முதலில் கரும்பு இடம்பெறவில்லை. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கரும்பை பயிரிட்டுள்ள விவசாயிகள் அதிருப்தி அடைந்து தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பில் முழு கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

அரசின் இந்த அறிவிப்புக்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து சூலூரில் கட்சி சார்பற்ற விவசாய சங்க தலைவர் சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகையில் கரும்பை சேர்த்திருப்பதற்கு வரவேற்கிறோம். இதனால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைவார்கள். இதே போல ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணை வழங்குதல், சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் வழங்குதல், கள் இறக்க அனுமதி உள்ளிட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.

அதேபோல பொங்கல் பரிசுத் தொகுப்பில் மஞ்சளையும் வழங்கினால் ஈரோடு, சேலம், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சளை விளைவித்து விலை பெறாமல் தவித்து வரும் விவசாயிகளும் பயன் அடைவார்கள். எனவே அதுகுறித்தும் முதலமைச்சர் பரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News