தமிழ்நாடு (Tamil Nadu)

சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராகி கையெழுத்திட்டார்

Published On 2024-10-05 08:41 GMT   |   Update On 2024-10-05 08:41 GMT
  • மோசடி வழக்குகள் சென்னை மத்திய குற்றப்பிரிவில் இருப்பதால் சனிக்கிழமை ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.
  • போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

சென்னை:

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 26-ந்தேதி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.

அவர் மீது மோசடி வழக்குகள் சென்னை மத்திய குற்றப்பிரிவில் இருப்பதால் சனிக்கிழமை ஆஜராகி கையெழுத்திட வேண்டும். அதன்படி இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி காலை 10 மணிக்கு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

Tags:    

Similar News