தமிழ்நாடு

திராவிட மாடல் அரசால் உருவாக்கப்பட்ட மகத்தான திட்டம் தான் "மக்களுடன் முதல்வர்": மு.க.ஸ்டாலின்

Published On 2024-02-16 06:16 GMT   |   Update On 2024-02-16 06:16 GMT
  • மக்களுக்கு நம்பிக்கையை விதைக்கும் திட்டம் தான், "மக்களுடன் முதல்வர்"
  • 30 நாட்களில் 3.50 லட்சம் பயனாளிகளுக்கு அவர்களது மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற "மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் கீழ் 1598 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

* திராவிட மாடல் அரசால் உருவாக்கப்பட்ட மகத்தான திட்டம் தான் "மக்களுடன் முதல்வர்"

* ஆட்சியில் இல்லாதபோது மக்களுக்காக போராடுவோம், வாதாடுவோம்.

* ஆட்சிக்கு வந்ததும் மக்களுக்கான நலத்திட்டங்களை தீட்டுவோம்.

* "மக்களுடன் முதல்வர்" திட்டம் மூலம் அரசு சேவைகளை பெற அலைய தேவையில்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

* மக்களை தேடி அரசு இயந்திரம் செல்கிறது.

* மக்களுக்கு நம்பிக்கையை விதைக்கும் திட்டம் தான், "மக்களுடன் முதல்வர்"

* 30 நாட்களில் 3.50 லட்சம் பயனாளிகளுக்கு அவர்களது மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.

* இதுவரை 60 ஆயிரத்து 500 பணியிடங்கள் நிரப்பட்டுள்ளன.

* தி.மு.க. ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது என்று கூறினார்.

Tags:    

Similar News