தமிழ்நாடு

கன்னியாகுமரி மக்கள் நலன் குறித்து எம்.பி. விஜய் வசந்த் ஆய்வு செய்தார்

Published On 2024-09-10 14:29 GMT   |   Update On 2024-09-10 14:29 GMT
  • மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்திற்கு எம்.பி. விஜய் வசந்த் தலைமை ஏற்று நடத்தினார்.
  • இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்திற்கு தலைமை ஏற்று, மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் குறித்து ஆய்வு செய்தார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், நாகர்கோவில் மாநகர மேயர் மற்றும் துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டம் தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் எம்.பி. விஜய் வசந்த் பகிர்ந்துள்ளார். 

Tags:    

Similar News