தமிழ்நாடு

"என் பேரு ஸ்டாலின் தாத்தா இல்ல.. ஸ்டாலின் அவ்வளவுதான்"- சிறுமியிடம் ஜாலியாக பேசிய முதலமைச்சர்

Published On 2024-07-15 05:38 GMT   |   Update On 2024-07-15 05:38 GMT
  • அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தின் விரிவாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
  • மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவருந்தி மகிழ்ந்தார்.

கீழச்சேரி:

பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்தநாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், கீழச்சேரி, அரசு உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் காமராஜரின் உருவப் படத்திற்கு மலர்தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து, மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடி காமராஜர் பிறந்தநாளான இன்று கீழச்சேரி அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தின் விரிவாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் 3995 அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்ததன் மூலம் 2.20 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.

பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவருந்தி மகிழ்ந்தார்.

அப்போது அங்கு படிக்கும் மாணவிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது என் பேரு என்ன என்று ஒரு மாணவியிடம் அவர் கேட்கிறார். அதற்கு அந்த மாணவி ஸ்டாலின் தாத்தா என்று கூற... என் பேரு ஸ்டாலின் தாத்தா இல்ல ஸ்டாலின் அவ்வளவுதான் என்று முதலமைச்சர் பதில் அளிக்கிறார்.

முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News