தமிழ்நாடு (Tamil Nadu)

எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம்


சட்டசபையில் அருகருகே அமர்ந்திருந்த எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம்

Published On 2022-10-18 08:15 GMT   |   Update On 2022-10-18 08:15 GMT
  • எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை பிரச்சினை நீடித்தது.
  • சட்டசபை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர்.

சென்னை:

அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை பிரச்சினை இன்னும் ஓயவில்லை. சட்டசபையிலும் இன்று இது எதிரொலித்தது.

தமிழக சட்டசபை இன்று கூடியது. அதற்கு முன்பாக அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள ஆர்.பி.உதயகுமாரை அமர வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் சபாநாயகர் முடிவு எதுவும் சொல்லவில்லை. இதனால் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை பிரச்சினை நீடித்தது. இந்த நிலையில் சட்டசபை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமியும், துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வமும் அருகருகே இருந்த இருக்கையில் அமர்ந்து இருந்தனர். ஆனால் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. இதனால் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Tags:    

Similar News