தமிழ்நாடு

ஒலிம்பிக் போட்டி: ஊக்கத்தொகை ரூ. 7 லட்சமாக உயர்வு- அமைச்சர் உதயநிதி அறிவிப்பு

Published On 2024-06-27 08:21 GMT   |   Update On 2024-06-27 08:21 GMT
  • கேலோ இந்தியா போட்டிக்கு ம.பிக்கு மத்திய அரசு ரூ. 25 கோடி கொடுத்து, தமிழகத்திற்கு கொடுத்தது ரூ. 10 கோடி.
  • ராயபுரம், கொடுங்கையூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்.

தமிழக சட்டப்பேரவையில் விளையாட்டுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

• விளையாட்டு வீரர்களுக்கு கலைஞர் ஸ்போர்ட்ஸ்கிட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

• திமுக ஆட்சிக்கு வந்த பின் விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 102 கோடி ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

• ஓட்டப்பந்தயம் என்றால் உசேன் போல்ட், கிரிக்கெட் என்றால் தோனி அதேபோல் அரசியல் களத்தில் முதல்வர் ஸ்டாலின்.

• கடந்த ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகள் 12 பேர் பங்கேற்றிருந்தனர். இந்த முறை பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க 16 பேர் தேர்வு பெற்றுள்ளனர்.

• பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ. 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

• கேலோ இந்தியா போட்டிக்கு ம.பிக்கு மத்திய அரசு ரூ. 25 கோடி கொடுத்து, தமிழகத்திற்கு கொடுத்தது ரூ. 10 கோடி.

• முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் கூடுதல் விளையாட்டுகள் இந்தாண்டு சேர்க்கப்படும்.

• அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்.

• கோவையில் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

• கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான பணிகள் விரைவுப்படுத்தப்படும்.

• உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 210 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

• ராயபுரம், கொடுங்கையூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்.

இவ்வாறு கூறியுள்ளார்.

Tags:    

Similar News