தமிழ்நாடு (Tamil Nadu)

மோடியால் நிலையான ஆட்சி கொடுக்க முடியுமா?- ப. சிதம்பரம் பதில்

Published On 2024-06-07 12:12 GMT   |   Update On 2024-06-08 03:50 GMT
  • இந்த தேர்தலில் வெற்றி என்பது காங்கிரஸ் கட்சிக்குத்தான்.
  • தார்மீக தோல்வி என்றால் அது மோடிக்குதான்.

மக்களவை தேர்தல் முடிந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க இருக்கிறது. பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ப. சிதம்பரம் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஒரு தேர்தலில் காங்கிரஸ் முதல் இடம் வந்தது. பாஜக 2-வது இடம் பிடித்தது. அப்போது அத்வானி பாஜக தலைவராக இருந்தார். அவர் வெற்றி பெற்ற கட்சி 2-வதாக வந்துள்ளது என்றார்.

இந்த தேர்தலில் வெற்றி என்பது காங்கிரஸ் கட்சிக்குத்தான். தார்மீக தோல்வி என்றால் அது மோடிக்குதான். அதனால் நாங்கள் வெற்றியை கொண்டாடினால் என்ன? அதில் அவருக்கு என்ன வருத்தம். அவர்கள் களையிழந்து, பொலிவிழந்து, உற்சாகம் இழந்து இருப்பதை நான் காண்கிறேன்.

வாக்கு இயந்திரம் குறித்து நாங்கள் புகார் எழுப்பவில்லை. வாக்கு அளித்ததற்கான ஒப்புகை சீட்டு வரும். அதை வாக்காளர் கையில் கொடுத்து பின்னர், பெட்டிக்குள் போட வைக்க வேண்டும். இந்த சிறு மாற்றத்தை நாங்கள் கேட்கிறோம். இன்னமும் மக்கள் EVM இயந்திரத்தை சந்தேகிக்கதான் செய்கிறார்கள்.

பாஜக-வால் நிலையான ஆட்சி கொடுக்க முடியுமா? என்பதற்கு மோடிதான் பதில் சொல்ல வேண்டும். ஏனென்றால் குஜராத்தில் 12 வருடம் முதல்வராக இருந்தபோது, பிரதமராக 10 ஆண்டுகள் இருந்தபோது ஒரு மனித ஆட்சியை நடத்திதான் அவருக்கு வழக்கம். ஒரு மனித ஆட்சி கூட்டணி ஆட்சியாக அமைக்கும் கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் நிலையான ஆட்சியாக இருக்குமா? என்பதை அவர் சொல்லலாம். இல்லை காலம் சொல்லலாம்.

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News