தமிழ்நாடு (Tamil Nadu)

பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு- பாஜக நிர்வாகிக்கு முன்ஜாமின்

Published On 2024-09-26 09:18 GMT   |   Update On 2024-09-26 09:18 GMT
  • கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன்ஜாமின் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் செல்வகுமார் மனு தாக்கல் செய்து இருந்தார்.
  • சமூக வலைதளங்களில் கருத்து பதிவு செய்வதற்கு முன்பாக அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும்.

பழனி பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையை சார்ந்த பாஜக தொழிற் பிரிவு மாவட்ட துணைதலைவர் செல்வகுமார் மீது கோவில் தேவஸ்தான நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பழனி கோவிலுக்கு திண்டுக்கல் தனியார் நிறுவனத்திடம் இருந்து நெய் வாங்குவதாக வலைத்தளங்களில் செல்வகுமார் தவறான தகவல் பரப்பி வந்தார். வதந்தி பரப்பியதாக பாஜக நிர்வாகிகள் செல்வகுமார், வினோஜ் பி செல்வம் மீது கோவில் நிர்வாகம் புகார் அளித்தது.

இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.

கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன்ஜாமின் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் செல்வகுமார் மனு தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் செல்வகுமாருக்கு நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

உண்மை தன்மையை ஆராயாமல் கருத்து பதிவிட்டதாக சமூக ஊடகங்களில் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

செல்வகுமார் தனது செல்போனை போலீசிடம் ஒப்படைக்க வேண்டும். சர்ச்சைக்குரிய கருத்தை நீக்க வேண்டும்.

தொடர்ந்து இதுபோல் நடந்துகொண்டால் சமூக வலைதளங்களில் இருந்து வெளியேற உத்தரவிட நேரிடும்.

சமூக வலைதளங்களில் கருத்து பதிவு செய்வதற்கு முன்பாக அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்று கடும் நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

Tags:    

Similar News