தமிழ்நாடு (Tamil Nadu)

ரிச்சர்டு சச்சின்

திண்டுக்கல்லில் ரவுடி மீது துப்பாக்கிச்சூடு

Published On 2024-10-04 02:19 GMT   |   Update On 2024-10-04 02:19 GMT
  • கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி ரிச்சர்டு சச்சின் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு.
  • படுகாயமடைந்த ரவுடி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திண்டுக்கல்:

திண்டுக்கல்லில் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி ரிச்சர்டு சச்சின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் செப்.28-ந்தேதி இர்பான் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய ரிச்சர்டு சச்சினை காவல் துறையினர் முழங்காலில் சுட்டு பிடித்தனர்.

இர்பான் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரிச்சர்டு போலீசாரை கண்டதும் தாக்கி விட்டு தப்ப முயற்சி செய்தார்.

தாக்குதலையடுத்து தற்காப்புக்காக ரவுடியின் முழங்காலில் போலீசார் சுட்டனர்.

போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் முழங்காலில் படுகாயமடைந்த ரிச்சர்டு சச்சின் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags:    

Similar News