தமிழ்நாடு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 13-ந்தேதி வரை நீட்டிப்பு

Published On 2023-09-30 03:07 GMT   |   Update On 2023-09-30 03:07 GMT
  • சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வருகிறார்.
  • செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 7-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வருகிறார். அவரது நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் காணொலி மூலம் சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி எஸ்.அல்லி முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை அக்டோபர் 13-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 7-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News