தமிழ்நாடு

மொட்டை அடித்து அனுப்பப்பட்ட தமிழக மீனவர்கள்- இலங்கை அரசை கண்டித்து போராட்டம்

Published On 2024-09-14 14:11 GMT   |   Update On 2024-09-14 14:11 GMT
  • தலா ரூ.50,000 அபராதம் செலுத்தியதால் விடுதலை செய்யப்பட்ட நிலையில் மொட்டை.
  • தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விடுதலையான தமிழக மீனவர்களை மொட்டை அடித்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தலா ரூ.50,000 அபராதம் செலுத்தியதால் விடுதலை செய்யப்பட்ட நிலையில், 5 மீனவர்களை மொட்டை அடித்து இலங்கை அரசு அனுப்பியுள்ளது.

5 மீனவர்கள் மொட்டை அடித்து தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் ராமேஸ்வரம் மீனவர்கள் ஆத்திரமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து, இலங்கை அரசை கண்டிக்கும் விதத்தில் தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இலங்கை அரசின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த மீனவர்கள் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News