தென் மாவட்டங்களுக்கு 44 சிறப்பு ரெயில்கள்- தென்னக ரெயில்வே அறிவிப்பு
- திருச்சி-தாம்பரம் (06190) இடையே திங்கள், வியாழன் தவிர வாரத்தில் 5 நாட்கள் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
- தாம்பரம்-கோவை (06184) இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
சென்னை:
நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைகள் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும். இதற்காக ஆங்காங்கே பணிபுரிபவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால் ஏற்படும் நெரிசலை சமாளிக்க நாடு முழுவதும் இந்திய ரெயில்வே துறை சிறப்பு ரெயில்களை இயக்கும்.
கடந்த ஆண்டு 4,429 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 6,556 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
இதில் தென்னக ரெயில்வே முதற்கட்டமாக 44 சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது.
இந்த ரெயில்கள் கொச்சுவேலி, சந்திரகாச்சி, ராமநாதபுரம், திருச்சி, கோவை, நெல்லை, ஈரோடு, நாகர்கோவில், மதுரை, கொல்லம், விசாகப்பட் டினம் உள்பட பல நகரங் களுக்கு இயக்கப்படுகிறது.
திருச்சி-தாம்பரம் (06190) இடையே திங்கள், வியாழன் தவிர வாரத்தில் 5 நாட்கள் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
தாம்பரம்-கோவை (06184) இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
இந்த ரெயில் வெள்ளிக்கிழமை தோறும் தாம்பரத் ல் இருந்தும், ஞாயிறு தோறும் கோவையில் இருந்தும் புறப்படும்.
இன்று இரவு சென்னை-சென்ட்ரல் நாகர்கோவில் (06178) சிறப்பு ரெயில் புறப்படுகிறது.
இந்த சிறப்பு ரெயில்கள் அடுத்த மாதம் (நவம்பர்) 30-ந்தேதி வரை இயக்கப்படும்.