தமிழ்நாடு

சின்ன பையன் என்ன செய்வான் என்பதை இனி பார்க்க போகிறீர்கள்.... அண்ணாமலை

Published On 2024-07-10 05:31 GMT   |   Update On 2024-07-10 05:31 GMT
  • ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு எல்லையை மீறி சென்றுவிட்டது.
  • ஆர்.எஸ்.பாரதியிடம் இருந்து ரூ.1 கோடி பெற்று கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்குவேன்.

சென்னை:

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தன்னை பற்றி அவதூறு பேசியதாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:-

* நான் அரசியலுக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் யார் மீதும் மான நஷ்ட வழக்கு தொடர்ந்ததில்லை.

* ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு எல்லையை மீறி சென்றுவிட்டது.

* ஆர்.எஸ்.பாரதி மீது சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என நீதிபதியிடம் வலியுறுத்தியுள்ளேன்.

* ஆர்.எஸ்.பாரதியிடம் இருந்து ரூ.1 கோடி பெற்று கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்குவேன்.

* இந்த சின்ன பையன் என்ன செய்வான் என்பதை இனி பார்க்க போகிறீர்கள்.

இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Tags:    

Similar News