தமிழ்நாடு (Tamil Nadu)

தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் நாளை முதலமைச்சர் நடைபயிற்சி செய்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கிறார்

Published On 2024-03-25 09:45 GMT   |   Update On 2024-03-25 09:45 GMT
  • பூங்காவில் தூய்மைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
  • தொடர்ந்து நாளை மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சாலை வழியாக எட்டயபுரம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

நெல்லை:

பாராளுமன்ற தேர்தலில் நெல்லை, கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாங்குநேரியில் இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு திரட்டி பேசுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சாலை வழியாக தூத்துக்குடிக்கு சென்று சத்யா ரிசார்ட்டில் இரவு தங்குகிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் அதிகாலை அங்குள்ள பூங்காவில் நடைபயிற்சி செய்தும், சாலையோர டீக்கடைகளில் டீ குடித்தவாறும் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் வாக்கு சேகரிப்பது வழக்கம்.

அந்த வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் நடைபயிற்சியில் ஈடுபட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டு வாக்கு சேகரிக்கிறார். இதற்காக பூங்காவில் தூய்மைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நாளை மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சாலை வழியாக எட்டயபுரம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

Tags:    

Similar News