தமிழ்நாடு

அன்பு சகோதரர் விஜயகாந்த் பூரண குணம் பெற பிரார்த்திக்கிறேன்... எடப்பாடி பழனிசாமி

Published On 2023-11-30 07:36 GMT   |   Update On 2023-11-30 07:36 GMT
  • அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் என அனைவரும் விஜயகாந்த் நலம் பெற வேண்டுவதாக தெரிவித்தனர்.
  • பிரேமலதா விஜயகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

சென்னை:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தின் உடல்நிலையில் கடந்த 18-ந்தேதி பின்னடைவு ஏற்பட்டது. மூச்சு விடுவதற்கு அவர் சிரமப்பட்டார். கடுமையான இருமல் மற்றும் சளித்தொல்லையும் ஏற்பட்டது.

இதையடுத்து நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த்துக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். எனினும் விஜயகாந்த் உடல்நிலை குறித்து நேற்று ஒரே நாளில் மருத்துவமனை சார்பில் 2 அறிக்கைகள் வெளியிடப்பட்டதால் தே.மு.தி.க. தொண்டர்கள், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் என அனைவரும் விஜயகாந்த் நலம் பெற வேண்டுவதாக தெரிவித்தனர்.

இதையடுத்து பிரேமலதா விஜயகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் விஜயகாந்த் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர், அன்பு சகோதரர் விஜயகாந்த் விரைவில் பூரண குணம் பெற்று இல்லம் திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன் என கூறியுள்ளார்.

Tags:    

Similar News