தமிழ்நாடு

கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான 'ஆரஞ்சு அலர்ட்'

Published On 2024-06-20 04:44 GMT   |   Update On 2024-06-20 06:20 GMT
  • சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இரவு நேரங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளது.
  • வருகிற ஞாயிற்றுக்கிழமை திருப்பூா், திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் 'மஞ்சள்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சென்னை:

தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் வருகிற 25-ந்தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இரவு நேரங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் (சனிக்கிழமை) திருப்பூா், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களிலும், வருகிற 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருப்பூா், திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் 'மஞ்சள்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

22, 23-ந்தேதிகளில் நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News