தமிழ்நாடு (Tamil Nadu)

தேனி மாவட்டத்தில் கனமழை... பெரியாறு, வைகை அணைகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2024-07-30 05:50 GMT   |   Update On 2024-07-30 05:50 GMT
  • வைகை அணையின் நீர்மட்டம் 54.89 அடியாக உள்ளது. வரத்து 1485 கன அடி.
  • சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

கூடலூர்:

தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரை பரவலாக மழை பெய்த நிலையில் அதன்பிறகு படிப்படியாக குறைந்து முற்றிலும் நின்று விட்டது. இதனால் அணைகளுக்கு வரும் நீரின் அளவும் குறைந்தது.

தற்போது தேனி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 128.90 அடியாக உள்ளது. வரத்து 3216 கன அடி. திறப்பு 1333 கன அடி. இருப்பு 4460 மி.கன அடி.

வைகை அணையின் நீர்மட்டம் 54.89 அடியாக உள்ளது. வரத்து 1485 கன அடி. திறப்பு 969 கன அடி. இருப்பு 2701 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 57 அடி. வரத்து மற்றும் திறப்பு 10 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 116.76 அடி. திறப்பு 3 கன அடி.

பெரியாறு 78.4, தேக்கடி 44.6, சண்முகாநதி அணை 12.6, ஆண்டிபட்டி 10.6, அரண்மனைபுதூர் 21, பெரியகுளம் 13, சோத்துப்பாறை 12, வைகை அணை 9.6, போடி 26.4, உத்தமபாளையம் 8.6, கூடலூர் 9.2.

கனமழை காரணமாக சுருளி அருவியில் நேற்று சீரான நீர்வரத்து வந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் இன்று காலை முதல் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதேபோல் போடி அருகில் உள்ள அணைப்பிள்ளையார் நீர் வீழ்ச்சியிலும் அதிக அளவு தண்ணீர் தடுப்புகளை தாண்டி செல்வதால் அங்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News