தமிழ்நாடு

தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி

Published On 2024-04-15 06:07 GMT   |   Update On 2024-04-15 06:07 GMT
  • தாளூர் தேவாலயத்திற்கு வந்த ராகுல் காந்தி தேவாலயத்தில் இருந்த கூட்டரங்கில் சுமார் 5 நிமிடங்கள் உரையாற்றினார்.
  • ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

தாளூர்:

பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நீலகிரி மாவட்டம் தாளூர் பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி கலந்துரையாடினார்.

தாளூர் தேவாலயத்திற்கு வந்த ராகுல் காந்தி தேவாலயத்தில் இருந்த கூட்டரங்கில் சுமார் 5 நிமிடங்கள் உரையாற்றினார்.


 வயநாடு தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள செல்லும் வழியில் நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி வந்தடைந்தார். அவர் வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News