தமிழ்நாடு (Tamil Nadu)

செந்தில் பாலாஜிக்கு ஜாமின்... செல்வப்பெருந்தகை வரவேற்பு

Published On 2024-09-26 08:27 GMT   |   Update On 2024-09-26 08:27 GMT
  • அத்திக்கடவு -அவிநாசி திட்டம் வரவேற்கத்தக்கது.
  • விடுபட்ட குளங்கள் இருந்தால் விரைவில் இணைப்பார்கள்.

திருப்பூர்:

சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவரும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவருமான செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் திருப்பூரில் இன்று வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்த பின், செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி இருப்பதை வரவேற்கிறேன். பா.ஜ.க., எதிர்க்கட்சி தலைவர்கள் மீது வழக்கு தொடுப்பதும், பின்னர் பா.ஜ.க.வில் இணைந்தால் அதனை வாபஸ் பெறுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்கள். செந்தில் பாலாஜியை ஏன் இத்தனை நாட்கள் சிறையில் அடைத்து வைத்து இருந்தார்கள்? என்று தெரியவில்லை. அவர் மீண்டும் அமைச்சராவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தன் மீது குற்றச்சாட்டு எழுந்திருப்பது தொடர்பாக அடுத்த 2 நாட்களில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்க இருக்கிறேன்.

அத்திக்கடவு -அவிநாசி திட்டம் வரவேற்கத்தக்கது. விடுபட்ட குளங்கள் இருந்தால் விரைவில் இணைப்பார்கள். இது போன்ற திட்டங்களால் தான் நிலத்தடி நீர் உயரும். மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. இதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், தொடர்ந்து ஆட்சியில் அதிகாரம் கேட்பது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., நோ கமெண்ட்ஸ் என பதிலளித்து சென்றார். 

Tags:    

Similar News