தமிழ்நாடு (Tamil Nadu)

தமிழக மீனவர்கள் 15 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

Published On 2024-09-29 02:40 GMT   |   Update On 2024-09-29 02:40 GMT
  • சிறைபிடித்த மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றது.
  • மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி உள்ளனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்சரம் மீனவர்கள் 15 பேரையும் கைது செய்துள்ள இலங்கை கடற்படை 2 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.

தலைமன்னார்- தனுஷ்கோடி இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறிய இலங்கை கடற்படை அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. மேலும் சிறைபிடித்த மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தமிழக மீனவர்கள், கைதான மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தி உள்ளனர். 

Tags:    

Similar News