தமிழ்நாடு

மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்து விபத்து: யூடியூபர் வாசன் ஜாமின் மனு 2-வது முறையாக தள்ளுபடி

Published On 2023-09-26 09:38 GMT   |   Update On 2023-09-26 09:38 GMT
  • டி.டி.எப்.வாசன் தனக்கு ஜாமின் வழங்கக் கோரி காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 21-ந்தேதி மனு தாக்கல் செய்தார்.
  • நீதிபதி ஜாமின் வழங்க மறுத்து டி.டி.எப்.வாசனின் ஜாமின் மனுவை 2-வது முறையாக தள்ளுபடி செய்தார்.

காஞ்சிபுரம்:

பிரபல யூடியூபர் டி.டி.எப்.வாசன் கடந்த 17-ந்தேதி காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று சாகசம் செய்ய முயன்றார். அப்போது விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். அவர் மீது பாலுசெட்டிசத்திரம் போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

அவர் தனக்கு ஜாமின் வழங்கக் கோரி காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 21-ந்தேதி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி அவருக்கு ஜாமின் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தார். இந்த நிலையில் யூ-டியூபர் வாசன் தனக்கு ஜாமின் வழங்கக் கோரி மீண்டும் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த நிலையில் அவருக்கு நீதிபதி ஜாமின் வழங்க மறுத்து அவரது ஜாமின் மனுவை 2-வது முறையாக தள்ளுபடி செய்தார்.

Tags:    

Similar News