காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தரிசனம்
- நிர்மலா சீதாராமன் பேட்டரி கார் மூலம் காமாட்சி அம்மன் கோவில் பிரகாரத்தை வலம் வந்தார்.
- மத்திய நிதி மந்திரி வருகையையொட்டி சுமார் 2மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
காஞ்சிபுரம்:
வண்டலூர் பகுதியில் உள்ள இந்திய தொழில்நுட்ப பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். பின்னர் அவர் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.
அவருக்கு அறநிலையத் துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நிர்மலா சீதாராமன் தாமரை மலர்கள், வஸ்திரங்கள் மற்றும் பழங்கள் கொண்டு சிறப்பு அர்ச்சனை மேற்கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டார்.
கோவில் நிர்வாகம் சார்பில் காமாட்சி அம்மனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஏலக்காய், முந்திரி பொருட்களான மாலை அவருக்கு அணி விக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நிர்மலா சீதாராமன் பேட்டரி கார் மூலம் காமாட்சி அம்மன் கோவில் பிரகாரத்தை வலம் வந்தார். அவர் காமாட்சி அம்மன் கோவிலில் சுமார் 20 நிமிடங்கள் சாமி தரிசனம் செய்தார்.
மத்திய நிதி மந்திரி வருகையையொட்டி சுமார் 2மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.