தமிழ்நாடு

முதலமைச்சரை அவதூறாக பேசிய வழக்கு- சி.வி. சண்முகம் கோர்ட்டில் ஆஜர்

Published On 2024-07-23 07:45 GMT   |   Update On 2024-07-23 08:59 GMT
  • விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
  • தடை ஆணை ஆவணங்களை விழுப்புரம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

விழுப்புரம்:

தமிழக முதலமைச்சரை அவதூறாகவும், தமிழக அரசை விமர்சித்து பேசியதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் எம்.பி., மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.வி. சண்முகம் எம்.பி. விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

விசாரணையின் போது சென்னை உயர்நீதி மன்றத்தில் உள்ள தடை ஆணை ஆவணங்களை விழுப்புரம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 13-ந் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ராதிகா உத்தரவிட்டார்.

Tags:    

Similar News