தமிழ்நாடு

கொள்ளிடம் ஆற்றில் சாய்ந்து விழுந்த மின்கோபுரம்- வீடியோ

Published On 2024-08-02 07:20 GMT   |   Update On 2024-08-02 07:20 GMT
  • கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக, அந்த மின் கோபுரத்தின் அடிப்பகுதி அரித்துச் செல்லப்பட்டது.
  • கொள்ளிடம் ஆற்றில் உள்ள மின் கோபுரத்திற்கு செல்லும் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

ஸ்ரீரங்கம்:

திருச்சி திருவானைக்காவல் கொள்ளிடம் நேப்பியர் பாலம் அருகே, ஆற்றுப்பகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரம் மெகாவாட் உயர் மின்னழுத்த கம்பிகள் செல்லும் ராட்சத கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக, அந்த மின் கோபுரத்தின் அடிப்பகுதி அரித்துச் செல்லப்பட்டது.

எப்போது வேண்டுமானாலும் அந்த மின்கோபுரம் சாய்ந்து விழும் அபாய நிலையில் இருந்ததால் கொள்ளிடம் ஆற்றில் உள்ள மின் கோபுரத்திற்கு செல்லும் மின்சாரம் நிறுத்தப்பட்டது. பின்னர் மாற்று வழியில் மின்சாரம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று இரவு ஆற்றுப்பகுதியில் உள்ள மின் கோபுரத்தின் அடிப்பகுதி முழுவதுமாக அரித்து செல்லப்பட்டதால் உயர் மின்னழுத்த கம்பிகள் செல்லும் ராட்சத கோபுரம் சாய்ந்து ஆற்றில் விழுந்தது.

மின் கோபுரம் இரவில் சாய்ந்ததாலும், மின்சாரம் நிறுத்தப்பட்டு இருந்ததாலும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. 

Tags:    

Similar News