தமிழ்நாடு

வேளாங்கண்ணி நினைவு ஸ்தூபி முன்பு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

சுனாமி நினைவு தினம்: வேளாங்கண்ணி நினைவு ஸ்தூபியில் சிறப்பு பிரார்த்தனை

Published On 2023-12-26 05:02 GMT   |   Update On 2023-12-26 05:42 GMT
  • வேளாங்கண்ணி ஆர்ச்சில் உள்ள சுனாமி ஸ்தூபியில் மும்மத பிரார்த்தனை நடைபெற்றது.
  • பகவத்கீதை, குரான், விவிலியம் உள்ளிட்டவைகளில் இருந்து வாசகங்கள் வாசிக்கப்பட்டது.

நாகப்பட்டினம்:

தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி சுனாமி பேரலை தாக்கியது. இதனால் கடலோர கிராமங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. கடலோர மாவட்டங்களில் வசித்த ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதனால், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ந்தேதி சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்த நிலையில் 19-வது ஆண்டு சுனாமி நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வேளாங்கண்ணி பேராலயத்தில் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

தொடர்ந்து, வேளாங்கண்ணி ஆர்ச்சில் உள்ள சுனாமி ஸ்தூபியில் மும்மத பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்று மெழுகுவர்த்தியை கைகளில் ஏந்தியவாறு கடற்கரையில் இருந்து அமைதி பேரணியாக வந்து அஞ்சலி செலுத்தினர்.

அப்போது பகவத்கீதை, குரான், விவிலியம் உள்ளிட்டவைகளில் இருந்து வாசகங்கள் வாசிக்கப்பட்டது.

சுனாமி ஏற்பட்டு 18 ஆண்டுகள் கடந்த நிலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வேளாங்கண்ணி நினைவு ஸ்தூபிக்கு வந்து கண்ணீர் மல்க மெழுகுவர்த்தி ஏந்தி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News