தமிழ்நாடு

பொய் மட்டுமே பேசி அரசியல் செய்து வரும் பாஜக- உதயநிதி ஸ்டாலின்

Published On 2024-07-20 06:25 GMT   |   Update On 2024-07-20 08:08 GMT
  • பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி பல முறை தமிழகத்திற்கு வந்தார்.
  • எதிர்வரும் சட்டசபை தேர்தல் வெற்றிக்கு திமுக இளைஞரணியினர் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும்.

சென்னை:

சென்னை தேனாம்பேட்டையில் திமுக இளைஞர் அணி 45-ம் ஆண்டு தொடக்க விழாவில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* திமுகவில் பல அணிகள் இருந்தாலும் முதல் அணி இளைஞரணி தான்.

* பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி பல முறை தமிழகத்திற்கு வந்தார்.

* பிரதமர் மோடியின் வருகையை நிராகரித்து 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணிக்கு மக்கள் வெற்றி அளித்துள்ளனர்.

* பாஜக பொய் மட்டுமே பேசி அரசியல் செய்து வருகிறது.

* திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற இளைஞரணியும் ஒரு காரணம்.

* சதிகளை முறியடித்து சாதனை ஆட்சியை 2026-லும் தொடர உறுதியேற்போம்.

* திமுக இளைஞரணியினர் சமூக வலைதங்களில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும்.

* ஒவ்வொரு மாவட்டத்திற்கு என இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் தளத்தில் புதிய கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது.

* எதிர்வரும் சட்டசபை தேர்தல் வெற்றிக்கு திமுக இளைஞரணியினர் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும்.

* இல்லம் தோறும் இளைஞரணி என்ற திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்.

* நகரம் முதல் கிராமம் வரை ஒவ்வொரு இல்லத்திற்கும் சென்று திமுகவின் திட்டங்கள், சாதனைகளை எடுத்துக்கூற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Tags:    

Similar News