தமிழ்நாடு (Tamil Nadu)

சென்னையில் மின்தடை இல்லை- தயார் நிலையில் 300 நிவாரண முகாம்கள்: உதயநிதி

Published On 2024-10-15 05:55 GMT   |   Update On 2024-10-15 05:55 GMT
  • பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடன் நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
  • சென்னையில் சுமார் 10,000 பேர் தங்கும் வகையில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகம் ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை, கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த பின்னர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* சென்னை முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் எந்த இடத்திலும் மின்தடை ஏற்படவில்லை.

* பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடன் நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

* சென்னையில் 20 சுரங்கப்பாதைகளில் வாகன போக்குவரத்து உள்ளது. சென்னையில் 2 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்துக்கு தற்காலிக தடை.

* சிவகங்கையில் நேற்று 13.4 செ.மீ, விருதுநகரில் 7 செ.மீ. மழை பெய்த நிலையிலும் எந்த சிக்கலும் ஏற்படவில்லை.

* சென்னையில் 80, மற்ற மாவட்டங்களில் 130 படகுகள் தயார் நிலையில் உள்ளன. சென்னையில் 631 உட்பட மொத்தம் 931 மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

* சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. சென்னையில் 300 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.

* சென்னையில் சுமார் 10,000 பேர் தங்கும் வகையில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.

* கடந்த முறை போன்ற இந்த முறை செல்போன் டவர் பிரச்சனை ஏதும் தற்போது வரை ஏற்படவில்லை.

* * மழை எச்சரிக்கை குறித்து ஆய்வு செய்த பின்பு பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அளிப்பது குறித்து இன்று மாலைக்குள் முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று கூறினார்.

Tags:    

Similar News