தமிழ்நாடு (Tamil Nadu)

வால்பாறையில் நிலச்சரிவு - 2 பேர் உயிரிழப்பு

Published On 2024-07-30 04:06 GMT   |   Update On 2024-07-30 04:06 GMT
  • மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
  • இதனால் மின்தடையும் நிலவி வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிகாலையில் கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தொடர்ந்து வால்பாறையிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர் கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று காலை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. நேற்று காலை முதலே வால்பாறையில் கனமழை பெய்து வருவதை அடுத்து பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் மீது மரங்கள் சரிந்து விழுந்தன. இதனால் மின்தடையும் நிலவி வருகிறது.

இந்த நிலையில், நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் சுவர் இடிந்து விழுந்து சிக்கி இருவர் உயிரிழந்தனர். 

Tags:    

Similar News