தமிழ்நாடு

செல்போன் கண்டெடுப்பு: வெற்றி துரைசாமியை தேடும் பணி தீவிரம்

Published On 2024-02-07 04:00 GMT   |   Update On 2024-02-07 04:00 GMT
  • காரில் பயணம் செய்த வெற்றியை காணவில்லை.
  • வெற்றி துரைசாமியின் செல்போன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, கடந்த 4 நாட்களுக்கு முன்பு இமாசலபிரதேசத்தில் உள்ள லடாக் பகுதிக்கு திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை சேர்ந்த உதவியாளர் கோபிநாத்துடன் (35) சுற்றுலா சென்றார்.

கடந்த 4-ந் தேதி மாலை அங்கிருந்து சென்னை திரும்புவதற்காக வாடகை காரில் விமான நிலையம் புறப்பட்டார்.

கார் கஷங் நாலா என்ற மலைப்பகுதியில் வந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தாக்கு பகுதியில் விழுந்து, அருகே ஓடிக்கொண்டிருந்த சட்லஜ் நதிக்குள் பாய்ந்தது.

விபத்து தகவல் அறிந்து போலீசார் அங்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். டிரைவர் தஞ்ஜின் காருக்குள் சீட் பெல்ட் அணிந்த நிலையில் இறந்து கிடந்தார். கோபிநாத் படுகாயத்துடன் பள்ளத்தாக்கு பகுதியில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

காரில் பயணம் செய்த வெற்றியை காணவில்லை. சீட் பெல்ட் அணிந்திருந்த அவர், காரை விட்டு வெளியே வந்திருக்கிறார். ஆனால், அவரது செல்போன் சிக்னலை வைத்து சோதனை செய்தபோது, விபத்து நடந்த பகுதியிலேயே காட்டுகிறது. அதனால், சட்லஜ் நதி தண்ணீரில் அவர் அடித்துச்செல்லப்பட்டிருப்பார் என்று போலீசார் கருதினார்கள். உடனே, மீட்பு பணிக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவை நாடினார்கள். அவர்கள் வந்து படகில் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் வெற்றி துரைசாமியின் செல்போன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து 15 கி.மீ. சுற்றளவில் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News