தமிழ்நாடு

விளவங்கோடு சட்டசபை தொகுதியில் நன்றி பிரச்சார பயணம் மேற்கொண்ட விஜய் வசந்த் எம்.பி

Published On 2024-09-09 14:50 GMT   |   Update On 2024-09-09 14:50 GMT
  • வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு விஜய் வசந்த் நன்றி தெரிவித்தார்.
  • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

கன்னியாகுமரி தொகுதி எம்.பி., விஜய் வசந்த் இன்று, விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நன்றி பிரச்சார பயணம் மேற்கொண்டார்.

விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உண்ணாமலைக்கடை, கொல்லஞ்சி, நட்டாலம், நல்லூர், விளாத்துறை ஆகிய பகுதிகளில் இன்று வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு விஜய் வசந்த் நன்றி தெரிவித்தார்.

இதேபோல், தோவாளை செக்கர்கிரி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் மற்றும் நெடுவிளை அருள்மிகு சிவ சுடலை மாடசாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில் பக்தர்களுடன் இன்று விஜய் வசந்த் எம்.பி கலந்து கொண்டார்.

தொடர்நது, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சிகள் தொடர்பான புகைப்படங்கள் விஜய் வசந்த் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Tags:    

Similar News