மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பிப்பவர்கள் இந்த தேதிகளில் முகாம்களுக்கு செல்ல வேண்டாம்
- கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான 2-ம் கட்ட முகாம்கள் கடந்த 5-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.
- வருகிற 15-ந்தேதி சுதந்திர தினம் என்பதால் அதையொட்டி கிராமசபை கூட்டங்களும் நடைபெறும்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான 2-ம் கட்ட முகாம்கள் கடந்த 5-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. வரும் 16-ந்தேதியுடன் முகாம்கள் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டது. 2-ம் கட்ட முகாம்கள் இப்போது நடைபெற்று வருகின்றன.
அதே சமயம் விடுபட்டவர்களின் வசதிக்காக வருகிற 19 மற்றும் 20-ந்தேதிகளில் முகாம்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வருகிற 15-ந்தேதி சுதந்திர தினம் என்பதால் அதையொட்டி கிராமசபை கூட்டங்களும் நடைபெறும். எனவே வருகிற 15 மற்றும் 16-ந்தேதிகளில் மகளிர் உரிமைத் தொகைக்காக திட்டமிடப்பட்டிருந்த முகாம்கள் நடைபெறாது.
இதற்குப் பதிலாக தமிழகம் முழுவதும் 34 ஆயிரம் இடங்களில் வருகிற 19 மற்றும் 20-ந்தேதிகளில் நடைபெறக்கூடிய முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.