செல்லா காசாக உள்ள இபிஎஸ் பொறாமையில் பேசுகிறார்- மு.க.ஸ்டாலின்
- திமுக கூட்டணி கட்சிகளுக்குள் விவாதம் தான் உள்ளதே தவிர விரோதம் இல்லை.
- மழை வந்தபோது சேலத்திற்கு ஓடி பதுங்கியவர் எடப்பாடி பழனிசாமி.
சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ வேணுவின் இல்லத் திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* திமுகவின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் முன்னாள் எம்எல்ஏ கி.வேணு.
* திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளுடன் கூறாத நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
* தேர்தலுக்காகவோ, பதவிக்காகவோ உருவாகாமல் கொள்கைக்காக உருவாக்கப்பட்டது திமுக கூட்டணி.
* திமுக கூட்டணி கட்சிகளுக்குள் விவாதம் தான் உள்ளதே தவிர விரோதம் இல்லை.
* திமுக ஆட்சியை நினைத்து எடப்பாடி பழனிசாமிக்கு பொறாமை.
* செல்லா காசாக உள்ள எடப்பாடி பழனிசாமி பொறாமையில் தான் திமுக அரசு சரிந்து கொண்டிருக்கிறது என கூறுகிறார்.
* மழை வந்தபோது சேலத்திற்கு ஓடி பதுங்கியவர் எடப்பாடி பழனிசாமி.
* திமுக கூட்டணி உடைந்துவிடும் என எடப்பாடி பழனிசாமி ஜோசியம் கூறுகிறார்.
* தனது கட்சியில் உள்ள குழப்பங்களை சரிசெய்ய முடியாமல் திமுகவை குறை கூறுகிறார் இபிஎஸ்
* கனவு காண வேண்டாம், 2026ல் மட்டுமல்ல அதனை தொடர்ந்து வரும் அத்தனை தேர்தல்களிலும் திமுக வெற்றி பெறும் என்று கூறினார்.