தமிழ்நாடு

4 ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் ரத்து

Published On 2024-10-28 19:24 GMT   |   Update On 2024-10-28 19:24 GMT
  • தமிழகத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
  • வேலை நிமித்தமாக தங்கி இருக்கும் பொது மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

சென்னை:

தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் கல்வி தொழில் வேலை நிமித்தமாக தங்கி இருக்கும் பொது மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

பயணிகள் வசதிக்காக, தெற்கு ரெயில்வே சார்பில் 35-க்கும் மேற்பட்ட சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

இதில், தமிழகத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. வழக்கத்தை விட, பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

எனவே, பயணிகள் நெரிசலை தவிர்க்கும் வகையில், சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர் ஆகிய 4 ரெயில் நிலையங்களில் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் பிளாட்பாரம் டிக்கெட் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News