தமிழ்நாடு (Tamil Nadu)

சிசிடிவி மூலம் த.வெ.க மாநாட்டின் பணிகளை கண்காணிக்கும் விஜய்

Published On 2024-10-24 13:04 GMT   |   Update On 2024-10-24 13:04 GMT
  • மாநாட்டு பணிகள் தொடர்பாக சில அறிவுரைகளையும் வழங்குவதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
  • மாநாட்டு திடலில் 100 அடி உயர கம்பத்தில் விஜய் கொடி ஏற்ற உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு பணிகளை காணொலி காட்சி வாயிலாக விஜய் கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாநாட்டு திடலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் அவ்வப்போது பணிகளை விஜய் கவனித்து வருவதாக கூறப்படுகிறது.

தொடர் கண்காணிப்பில் உள்ள விஜய் அவ்வப்போது மாநாட்டு பணிகள் தொடர்பாக சில அறிவுரைகளையும் வழங்குவதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், குடிநீர், பார்க்கிங் உள்ளிட்ட வசதிகள் குறித்து நிர்வாகிகளுடன் விஜய் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

பொது மக்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாத அளவிற்கு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளார்.

மாநாட்டு திடலில் 100 அடி உயர கம்பத்தில் விஜய் கொடி ஏற்ற உள்ளார். விஜய் கொடியேற்ற உள்ள கொடி கம்பத்தை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மாநாட்டு திடலில் விஜய் கொடியேற்றும் கொடிக்கம்பத்தை 10 ஆண்டுகளுக்கு அகற்றாதபடி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News