உலகம் (World)

தமிழக மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையால் கைது

Published On 2024-09-21 13:53 GMT   |   Update On 2024-09-21 13:53 GMT
  • மீனவர்களின் 3 படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது.
  • கைது செய்யப்பட்ட 37 மீனவர்களும் காங்கேசன் துறைமுக கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி தமிழக மீனவர்கள் 37 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மீனவர்களின் 3 படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது

கைது செய்யப்பட்ட நாகை மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த 37 மீனவர்களும் காங்கேசன் துறைமுக கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் நிகழ்வு அண்மை காலங்களில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News