உலகம்

அதிபர் ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மீண்டும் கொரோனா தொற்று

Published On 2022-07-30 19:38 GMT   |   Update On 2022-07-30 19:38 GMT
  • அமெரிக்க அதிபராக பதவி வகித்து வருபவர் ஜோ பைடன்.
  • இவருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த வாரம் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். ஜோ பைடனை டாக்டர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வந்தது.

இதற்கிடையே, அதிபர் ஜோ பைடன் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துவிட்டார். என அதிபரின் டாக்டர் கெவின் ஓகானர் தெரிவித்தார்.

இந்நிலையில், அதிபர் ஜோ பைடனுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று மீண்டும் உறுதியானது. இதனால் மீண்டும் அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என டாக்டர் குழு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News