உலகம் (World)

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்- 100 பேர் உயிரிழப்பு

Published On 2024-09-23 13:57 GMT   |   Update On 2024-09-23 13:57 GMT
  • பேஜர், வாக்கி டாக்கிகள் வெடிப்பு சம்பவங்களை அடுத்து லெபனானில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
  • தெற்கு லெபனானில் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெற்கு லெபனானில் தாக்குதலை இஸ்ரேல் தீவிரமாக்கியுள்ளது.

தெற்கு லெபானானில், ஹிஸ்புல்லா ஆயுத குவியல் இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

அதன்படி, 300க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா இலக்குகளை தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

பேஜர், வாக்கி டாக்கிகள் வெடிப்பு சம்பவங்களை அடுத்து லெபனானில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

இதையடுத்து, தெற்கு லெபனானில் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், 2 நாட்களுக்கு லெபனானில் பள்ளிகள் மூடப்படுகிறது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கிழக்கு, தெற்கு மற்றும் பெய்ரூட் நகரின் தென்பகுதியில் பள்ளிகள் மூடப்படுகிறது.

Tags:    

Similar News